வியாழன், 3 ஜூலை, 2014

சத்ரு சங்கார வேற் பதிகம்




       ... காப்பு ...

சண்முகக் கடவுள் போற்றி
சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி.

       ... நூல் ...

       ... 1 ...

அப்பமுட னதிரசம் பொறிக்கடலை துவரைவடை
யபமுதுசெய் யிமுகவனும் ஆதிகேசவனிலட்சுமி திங்க
டினகர னயிராவதம் வாழ்கவே, முப்பத்து முக்கோடி
வானவர்களிடர்தீர முழுது பொன்னுலகம் வாழ்க
மூவரொடு கருடகந் தருவர்கிம்பு ருடரும்
முதுமறைக் கிழவர் வாழ்க செப்பரிய விந்திரன்
தேவியி ராணி தன் திருமங்கலம் வாழ்கவே
சித்திவித்யாதரர் கின்னரர்கள் கனமான
தேவதைகள் முழுவதும் வாழ்க சப்தகலைவிந்துக்கு
நாதீயா மதி ரூப சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தியெதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே.

       ... 2 ...

சிந்திசுந்தரி கெளரி யம்பிகை க்ருபா நிதி
சிதம்பரி, சுதந்தரிபரசிற்பரி சுமங்கலி நிதம்
பரிவிடம் பரிசிலா சுதவிலாசவிமலி கொத்துதிரி
சூலிதிரி கோணத்தி ஷட் கோண குமரிகங்காளிருத்ரி
குசலிவோங்காரி ரீங்காரியாங்காரி வீங்காரி
ரீகாரியம்பா, முக்தி காந்தா மணிமுக்குண சுந்தரி
மூவர்க்கு முதல்வி ஞான முதுமறைக் கலைவாணி
யற்புத புராதனி மூவுலகுமான ஜோதி,
சக்தி சங்கிரி நீலி கமலி பார்வதி
தரும் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 3 ...

மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும்
முனிவரொடு மசுரர் கூடி முழுமந்த்ர கிரி தன்னை
மத்தாகவே செய்து முதற்கணத் தமுது பெறவே
கோரமுளவாக கியினாயீரம் பகுவாயில்
கொப்பளிதிடு விடங்கள் கோளகையு
மண்டங்களியாவையு மெரித்திடுங்கொடியவர
வினைப்பிடித்து வீரமுடன் வாயினாற்
குத்தியுதிரம் பரவ விருதாளிலே மிதித்து
விரிந்துகொழுஞ் சிறகு அடித்தே யெடுத்துதரும்
விதமான தோகை மயில் சாரியாய்த் தினமேறி
விளையாடி வருமுருக சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 4 ...

உக்ரமுள தாருகன் சிங்காமசூரனு முன்னுதற்குரிய
சூரன் உத்திகொளு மக்நி முகன்ட் பானுகோபன்
முதல் உத்தண்ட வசுரர்முடிகள், நெக்குவிடகரி
புரவி தேர்கள் வெள்ளங்கோடி நெடியபாசங்கள்
கோடி நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள், குருதி
நீரிற் சுழன்றுலவவே, தொக்கு தொகு திதிதிதிமி
டுண் டுடுடு டகுகு டிகு துந்துமி தகுகு திதிதை தோத்தி
மிடங்கு குகுடிங் குகுகு சங்குகென தொந்தக்
கவந்தமாட, சக்ரமொடு சத்திவிடுதணிகை
சென்னியில்வாழுஞ் சரவணணை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 5 ...

அந்தியிற்பேயுச் சிறுமுனி காட்டேரி
அடங்காத பகலிரிசியும் அகோர கண்டங்கோர
கண்ட சூனியம்பில்லி அஷ்ட மோகினி பூதமும்,
சந்தியான வசுகுட்டி சாத்திவேதாளமுஞ் சாக்னி
யிடாகினிகளும் சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடுமுனிகளும், கிந்தை நொந்தலறி
திருவெண்ணீறு காணவே தீயிலிடு மெழுகு போல,
தேகமெல்லாங் கருகி நீறாகவே நின்று சென்னிருதணிகை
மலையில், சந்ததங்கலியாண சாயுட்ச
பதமருளுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 6 ...

கண்டவிட பித்தமும் வெடிப்பு தலைவலி
யிருமல் காமாலை சூலைகுஷ்டம், கண்ட மாலைத்
தொடைவாழையாய்ப் பற்றினொடு கடினமாம்
பெருவியாதி அண்டொணாதச் சூரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம் அடங்காத விரும்பஃது
மேகமுடனா உலகத்தி லெண்ணாயிரம் பேர் கொண்ட
தொரு நோய்களும் வேலொன்றுரைத்திடக்
கோவென்ன வோலமிட்டுக் குலவுதின கரன்முன்
பஞ்சுபோல் நீங்கிவிடும் குருபரன் நீறணிந்து, சண்டமாருத
காலவுத்தண்ட கெம்பீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 7 ...

மகமேரு ளதயகிரி யஸ்திகிரியுஞ்
சக்ரவாவுகிரி நிடதவிந்தம், மாருக்ர
தரநரச் சிந்மகிரி யத்திகிரி மலைகளொடு மதனசுமவா
ஜெகலெடுத் திடுபுட்ப தந்தமயிராவதம்
சீர்புண்டரீக்குமுதம் செப்புசா ருப்
பூமி பஞ்சினம் சுப்பிர தீபவா மனமாதிவா
சுகிமகா புதுமனானந்தகார்க் கோடகன் சொற்சங்க
பாலகுனிகன் தூயதக்கண் பதும சேடனோடரவெலாம்
துடித்துப் பதைத்ததிரவே தகதகென நடனமிடு
மயிலேறி விளையாடுஞ் சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 8 ...

திங்கள் பிரமாதியரு மிந்திராதி தேவருத்தினகாரு
முனிவரொடு சிந்திரா புத்திரர்மொளி
யகலாமலிருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியுமயிராணி யொடுதத்த
மாதரிரு தாள்பணியவும் மகாதேவர் செவிகூறப்
பிரணவமுரைத்திட மலர்ந்த செவ்வாய்களாறும்
கொங்கை களமம் புணுகு சவ்வாது மணவள்ளி குமரி
தெய்வானையுடனே கோதண்டபாணியும்
நான்முகனுமே புகழ் குலவுதிருத்
தணிகை மலைவாழ், சங்குசக்கர மணியும்
பங்கையக்குமர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 9 ...

மண்டலம் பதினாலு லோகமும் அசைந்திட
வாரிதியே ரெழும்வறள வலிய வசுரர் முடிகள்
பொடிபடக் கிரவஞ்ச மாரியெழத் துரளியாகக்
கொண்டனிற வெனுமக ரண்டங்களெங்குமே கூட்டமிட்டேக
அன்னேர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெடுத்து அண்டர்பணி
கதிர்காமம் பழநிசுப்பிரமணிய மாவினன் குடியே ரகம்,
அருணாசலங்கைகலை தணிகைமலை மீதிலுரை ஆறுமுகப்
பரம குருவாம், சண்டமா ருதகால சம்மார
வதிதீர சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... 10 ...

மச்சங் குதித்துநவமணி தழுவ வந்தநதி
வையாபுரி பொய்கையும் மதியமுத்தஞ்
செய்யும் சொற்கோபுரத் தொளியும்
வானமேவு கோயிலழகும், உச்சிதம தானதிரு
வாவினன் குடியில்வாழ் உம்பரிட முடிநாயக, உக்ரமயி
லேறிவரு முருக சரவணபவ ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகர னானைமுறை செய்யவே ஆழியை
விடுத்தானையை, றன்புட னிரட்சித்த திருமால்
முகந்தனெனு மரிகிருஷ்ண ராமன் மருமகன், சச்சிதானந்த
பரமானந்த சுரகந்த சரவணணை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி யெதிராடிவிடுஞ்
சத்ரு சங்கார வேலே.

       ... சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக